பென்சில் பிடித்து எழுதிய என் கை
பேனா பிடிக்க ஆசைப்பட்டது நான்காம் வகுப்பில
என் வீட்டு பக்கத்து கடையில
அம்மா வாங்கித்தந்தது உன்னைத்தானே
தொலைக்காம கவனமா பாவிக்கனும்
என்று சொல்லி தந்தவா என் கையில
அப்போ தான் முதன் முதலில்
என் கையில நீ தவன்றதாய் ஞாபகம்
என் எழுத்தும் படிப்படியா
அழகாய் வந்ததும் உன்னாலே
பள்ளி மேசையில உன்னை வைச்சு
சுண்டி விளையாடினதும் ஞாபகமிருக்கு
பல தடவை தோற்றிருக்கன்
பல தடவை வென்றிருக்கன்
நண்பன் வீட்டு TVயில
சக்திமான் நாடகம் பார்க்கையில
இடைவெளியில வந்த விளம்பரத்தில
சொற்களின் இணையற்ற பந்தம் Reynolds
என்று பார்த்ததும் ஞாபகமிருக்கு
உன் பெயர் பொறித்த எழுத்துக்கள
என் பிளேட்டால சுரண்டி
என் பெயரா மாத்தினதும் ஞபாகமிருக்கு
உயர்தரம் படிக்கும் வரை
என் கூட இருந்ததும் ஞாபகமிருக்கு
ஏழு வருசம் கழிச்சு இப்பத்தான்
உன்னை பாக்குறன்
அதுவும் போட்டோல தான்
அது சரி
என்னையும் நாளைக்கு
போட்டோல தானே பார்க்கப் போறங்க
நீ மட்டும் என்ன விதி விலக்கா?? ம்ம்..
AwesuM LyricS...!:-D
ReplyDelete