Tuesday, September 18, 2012

பிஞ்சு பருவ சகோதரன்.. !!!




பென்சில் பிடித்து எழுதிய என் கை
பேனா பிடிக்க ஆசைப்பட்டது நான்காம் வகுப்பில



என் வீட்டு பக்கத்து கடையில

அம்மா வாங்கித்தந்தது உன்னைத்தானே

தொலைக்காம கவனமா பாவிக்கனும் 

என்று சொல்லி தந்தவா என் கையில



அப்போ தான் முதன் முதலில்

என் கையில நீ தவன்றதாய் ஞாபகம்
என் எழுத்தும் படிப்படியா

அழகாய் வந்ததும் உன்னாலே



பள்ளி மேசையில உன்னை வைச்சு

சுண்டி விளையாடினதும் ஞாபகமிருக்கு

பல தடவை தோற்றிருக்கன்

பல தடவை வென்றிருக்கன்



நண்பன் வீட்டு TVயில 

சக்திமான் நாடகம் பார்க்கையில

இடைவெளியில வந்த விளம்பரத்தில

சொற்களின் இணையற்ற பந்தம் Reynolds 

என்று பார்த்ததும் ஞாபகமிருக்கு



உன் பெயர் பொறித்த எழுத்துக்கள

என் பிளேட்டால சுரண்டி

என் பெயரா மாத்தினதும் ஞபாகமிருக்கு



உயர்தரம் படிக்கும் வரை

என் கூட இருந்ததும் ஞாபகமிருக்கு

ஏழு வருசம் கழிச்சு இப்பத்தான்

உன்னை பாக்குறன்

அதுவும் போட்டோல தான்



அது சரி

என்னையும் நாளைக்கு

போட்டோல தானே பார்க்கப் போறங்க

நீ மட்டும் என்ன விதி விலக்கா?? ம்ம்..

Tuesday, January 31, 2012

தெளிவாய் உன் இலக்கை தெரிந்து கொண்டால் புழுவாய் இருந்தாலும் உழுவாய் ஓர் நிலத்தை...



காலத்தின் போக்கிலே வாழ்க்கையை ஓடிக்கிட்டிருந்த எனக்கு.. என் சொந்தங்களின் சில ஏளனமான கதைகள் என் நெஞ்சிலே தீயை மூட்டின.!
வாழ்க்கையில சாதிக்கணும் என்ற வெறியோட கடந்த கால அனுபவங்களை படிப்பினையாக வைச்சு இலட்சியம் (Pilot / Captain)நோக்கிய பயணத்துக்காக காத்துக்கிட்டு இருந்தன்.. அதிஸ்டமே கூரைய பிரிச்சுக்கொண்டு வந்ததுபோல எனக்கும் கப்பலில் கேப்டன் ஆகுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது.. என் அப்பாவின் & காதல் தேவதையின் விருப்பத்துடன் மட்டும் (அம்மாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும்).. நான் ஒருவரின் கருத்துக்களையும் செவிமடுக்காது என் தன்னம்பிக்கையை மட்டும் நம்பி, களம் சென்றேன்.. மிகப்பெரிய தொகையை என் அப்பா என் விருப்பத்துக்காக சிறிதும் ஜோசிக்காது முதலீடு செய்தார்.. அது என்னை மனமுருக வைத்தது..!! விளையாடி திரிஞ்ச காலம் இனி முற்றாக மாற்றியமைக்க வேண்டிய கடைப்பாடு என் மேல் போடப்பட்ட பெரிய சுமை.. கஷ்டங்களை அனுபவித்தேன்.. சிறு வேலை கூட செய்தறியாத எனக்கு அங்கு சமாளிப்பது என்பது... வார்த்தைகளால் வருணிக்க முடியாதவை..!! இருந்தாலும் ஆறு மாதங்கள் பொறுத்திருந்தேன்..
அதற்கு பலனாக.. முடிவில், எனது முதலாவது தடைக்கல்லை BatchTop உடனும் Best Seamanship என்ற Award உடனும் சாதித்துவிட்டேன்..
என் வாழ்க்கை பயணத்தில் என் அப்பா & அம்மாவுக்கு நான் கொடுத்த மிகப்பெரிய சந்தோஷமான தருணம் இது..!!
இது என் பயணத்துக்கு உத்வேகத்தையும் பலமான அத்திவாரத்தையும் இட்டுள்ளது..
இது ஆரம்பமே தவிர..... முடிவில்லை..!!
இன்னும் சாதிக்கவேண்டிய தருணங்கள் நிறையவே இருக்கு..
என் அப்பா, அம்மா, அண்ணா & காதல் நாயகிக்கு செய்ய வேண்டியவை நிறைய உள்ளன..!!
My Dad Lighted Up My Life..!! & My Girl Made Me So Happy Throughout The Course Period..!!

பயணங்கள் முடிவதில்லை..!!


அன்புடன்,
நிம்மி.

Monday, May 25, 2009

காதல் கொண்ட வலி எ(நிமல)ன்னுடனேயே போகட்டும்..!!





கண்ணை விரும்பினேன்,

உன்னை எனக்கு காட்டி கொடுத்ததால்....

என் உயிரை விரும்பினேன்,

உன்னோடு வாழப் போகிறதே என்பதனால்.....

என்னையே விரும்பினேன்,

நீ வந்த பின் என்னில் ஏற்பட்ட மாற்றத்தால்......

இவை அனைத்தும் பொய்யானால்...

என்னையே நான் இழக்க நேரிடலாம்....

மீட்டிப் பார்க்கிறேன் என்னுடைய நாளேடுகளை...

அங்கே உன் பெயர் தவிர வேறு ஏதும் என் கண்ணுக்கு அகப்படவில்லையடி....

காதலிக்கும் முன் ஒரு கணம் யோசித்து இருந்தால்..

காதலித்த பின் ஏன் இந்த கலக்கம்.....????

பெண்ணே !!

வந்து விடு பெண்ணே ...என்னிடமே வந்து விடு.........!!

காதலை உணர்ந்து வந்த காத(நிம)லன் நானே...




காதலை உணர்ந்து வந்த காதலன் நானே.! 
உன் காதலை சுமந்து வந்த கருவறையும் நானே.!

கலையில் உருவான ஒவியமா நீ ?
அல்ல என் கதைக்குள்ளே உருவான கற்பனையா நீ?
நீ என் நிழலா? இல்லை என் நிஜமா?


மேகத்தை பெண்ணாக அழைத்து
அனுப்பிய என் கனவுதேவதையே..
வேகத்தை நதியாக வளைத்து
உருகிய என் காதல் தேவதையே.

ப்ரம்மன் உன்னை படைத்தது போலவே
நானும் காதலை விதைத்துவிட்டேன்.!


சினேகத்தை உயிராக நினைத்து
வருடிய என் இதயக் காதலியே..
தேகத்தை காலமாக இணைத்து
நாடிய என் இதயக் காவியமே.!

கவிஞன், தானும் தன் மாதை வருணித்தது போலவே
நானும் உன்னை ரசித்துவிட்டேன்.!